லாரி மோதி மோட்டார் மெக்கானிக் சாவு

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மோட்டார் மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மோட்டார் மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சேர்ந்தவர் வி. ரெத்தினம் (50). மோட்டார் மெக்கானிக்கான இவர், செவ்வாய்க்கிழமை அவரது மோட்டார் சைக்கிளில் நீர்மூழ்கி மோட்டாரை எடுத்துக்கொண்டு ஆலங்குடிக்கு சென்றுள்ளார். அவர், கல்லாலங்குடி அருகே சென்றபோது, பின்னால், வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com