பெற்றோர் - ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
இப்பள்ளியில் கடந்த 10 வருடங்களாக பெற்றோர் - ஆசிரியர் சங்கம் இல்லாமல் பள்ளியின் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டு வந்தது. மேலும் ஆண்டுவிழா, விளையாட்டு விழா போன்றவையும் நடத்தப்படவில்லை.
 இந்நிலையில், வியாழக்கிழமை மேலத்தானியம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியினால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக பழனியாண்டி, 
துணைத் தலைவராக தாயுமானவன், செயலராக பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிவாணன், பொருளாளராக பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com