அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
முக்கண்ணாமலைப்பட்டியில் நடைபெற்ற விழாவில் வருவாய் ஆய்வாளர் அன்பரசு, கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.