சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

அறந்தாங்கி அருகே இடையன்காட்டைச் சேர்ந்தவர் தனது 3 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை மாலை, அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் இருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச்

அறந்தாங்கி அருகே இடையன்காட்டைச் சேர்ந்தவர் தனது 3 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை மாலை, அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் இருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரமணி இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்துள்ளார். இதையடுத்து தனது மகளை பள்ளிவாசல் அருகே இறக்கிவிட்டுச் செல்லும் படி ஒருவர் வீரமணியிடம் உதவி கேட்டுள்ளார். சிறுமியை வாகனத்தில் ஏற்றிச்சென்ற அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவுசெய்து விட்டு, பள்ளிவாசல் அருகே விட்டுச் சென்றுவிட்டார். அங்கே அழுதுகொண்டு நின்றிருந்த சிறுமியிடம் அவரது தாய், விசாரித்ததில் அந்த இளைஞர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளிவாசலில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கே.பாலமுருகன் வீரமணியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com