விராலிமலை அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
விராலிமலை ஒன்றியம், தேராவூர் அண்ணா சமுத்திரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பன்னீர்செல்வம் (22). பெருங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர் திரும்பிய பன்னீர்செல்வம் தனது நண்பர் கோபி என்பவருடன் ஈச்சங்குடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கொடும்பாளூரிலிருந்து புதுகை நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பன்னீர்செல்வத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த விராலிமலை போலீஸார் பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இகுறித்து பன்னீர்செல்வத்தின் அண்ணன் முத்துசாமி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.