மோட்டார் சைக்கிளை வழிமறித்து 40 பவுன் நகை பறிப்பு: 7 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரிடம் 40 பவுன் நகைகளை பறித்துச்சென்ற 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரிடம் 40 பவுன் நகைகளை பறித்துச்சென்ற 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள மூலிப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் முத்துசாமி (25). இவர், அண்மையில் மாத்தூர் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருந்த 40 நகைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
 மாத்தூர் பகுதியில் உள்ள  சுற்றுவட்டச் சாலை அருகே சென்றபோது, அப்பகுதியில் காருடன் நின்றுகொண்டிருந்த சிலர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து, முத்துசாமியை தாக்கி, அவரிடம் இருந்த 40 பவுன் நகைகளை பறித்துச் சென்று
விட்டனராம்.
இதில்,  காயம் அடைந்த முத்துசாமி, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மாத்தூர் போலீஸார் தனிப்படை அமைத்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
 இந்நிலையில், நகைகளை பறித்துச்சென்றதாக கீரனூர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த வி.முத்தமிழ்செல்வன் (25), கடைபிள்ளையார்பட்டியைச் சேர்ந்த எல்.கார்த்திகேயன் (29), பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த பி.விக்னேஷ் (26), ஜி.வெங்கடேசன் (22), பி.சக்திவேல் (23), எட்டுக்கால்பட்டியைச் சேர்ந்த எ.ஜெகன் (24), கீரனூர் பி.பிரேம்குமார் (25) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களது காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com