அன்னவாசல் அருகே மணல் ஏற்றிவந்த டிப்பர் லாரி பறிமுதல்

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த  டிப்பர் லாரியை இலுப்பூர் வட்டாட்சியர் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த  டிப்பர் லாரியை இலுப்பூர் வட்டாட்சியர் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
 அன்னவாசலை அடுத்த புல்வயல் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் டிப்பர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக இலுப்பூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வட்டாட்சியர் சோனைகருப்பையா கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com