அறந்தாங்கி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட வழக்கில், துரிதமாக செயல்பட்டு 4 பேரைக் கைது செய்த அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி செல்வராஜ் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் வாங்கி விற்பது, மனைவணிகம் ஆகிய தொழில்கள் செய்துவரும் மூக்குடி பிரசாத், கடந்த மாதம் பொற்குடையார்கோயில் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்தனர். இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி செல்வராஜ் வெகுமதி மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கினார்.