ஆதினமிளகி  அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஆவாம்பட்டியில் களிமண்ணினால் புரவிகள் மற்றும் காளைகள் சிலைகள் வடிவமைக்கப்பட்டு,  அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆவாம்பட்டியிலிருந்து ஊர்வலமாக புரவிகள் மற்றும் காளைகள்  சுமார் 2  கி.மீட்டர் தொலைவு உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு அங்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், மேலத்தானியம், உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, சூரப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, முள்ளிப்பட்டி, அம்மாபட்டி, வடக்கிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். காரையூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com