இலுப்பூரில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம்

இலுப்பூர் சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலுப்பூர் சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல்  வடக்கு ஒன்றியம், இலுப்பூர் பேரூர் கழகம் சார்பில் திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டத்துக்கு அன்னவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். இலுப்பூர் நகரச் செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்ல பாண்டியன்,  இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.பழனியப்பன், சபிபுல்லா, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com