உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் மனு அளிப்பு

புதுக்கோட்டையில் உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 

புதுக்கோட்டையில் உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள் அளித்த மனு: அரசாணைப்படி 11.10.2017ஆம் தேதி முதல் நகராட்சி ஒப்பந்த, சுயஉதவிக்குழு துப்புரவுப் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 
ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.216, நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்திற்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஆட்சியரகத்தில் ஆட்சியர் இல்லாததால், அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com