தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகியை கண்டித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார்.
கலவரங்களை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக தேசியச்செயலர் எச்.ராஜாவை
கண்டித்தும், திருச்செந்தூரில் துண்டறிக்கை விநியோகித்த அய்யாக்கண்ணுவை தாக்கிய பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.