நகர்ப்புற வியாபாரத்திற்கான குழுவை அமைக்க சிஐடியு வலியுறுத்தல்

பொன்னமராவதி பேரூராட்சியில் நகர்ப்புற வியாபாரத்திற்கான குழுவை தாமதமில்லாமல் உடனடியாக அமைக்க சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதி பேரூராட்சியில் நகர்ப்புற வியாபாரத்திற்கான குழுவை தாமதமில்லாமல் உடனடியாக அமைக்க சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.தீன் விடுத்துள்ள அறிக்கை    :  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல்) சட்டத்தில் கூறப்பட்டுள்ள படி பொன்னமராவதி பேரூராட்சியில் நகர்ப்புற வியாபாரத்திற்கான குழுவை தாமதமில்லாமல் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அடையாள அட்டை பெற்ற சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கான கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக பெறுவதற்கு பேரூராட்சிகள் இணை இயக்குனர், செயல் அலுவலர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com