புதுகை மருத்துவமனை சுவற்றில் அரசுப் பேருந்து மோதியதில் 18 பேர் காயம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சுவற்றில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மோதியதில் 18 பேர் காயமடைந்தனர். 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சுவற்றில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மோதியதில் 18 பேர் காயமடைந்தனர். 
 புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட நகரப் பேருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் வந்தது. பேருந்தை ஓட்டுநர் ரவிச்சந்திரன்(55) திருப்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து மருத்துமனை நுழைவாயில் சுவற்றில் மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த  கட்டுமாவடியைச் சேர்ந்த  பழனியம்மாள்,  ஆட்டாங்குடி மாலதி, சிவகாமி, மாஞ்சான் விடுதி செல்வி, பெருமாள் பட்டி அஞ்சலை, வெள்ளனூர் நூர்ஜகான் பேகம் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸார் விசாரனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com