பொன்னமராவதி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொன்னமராவதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான தூரல் மழை பெய்த நிலையில், பிற்பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் கோடையின் தாக்கம் சற்று தணிந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.