புதுக்கோட்டையில் மார்ச் 27 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, நடவடிக்கை எடுக்கும் விதமாக மாதந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(மார்ச் 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.