அறந்தாங்கியில் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பெரியாளூரை சேர்ந்தவர் பிரகாஷ் (19). இவர் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வியாழக்கிழமை வந்தபோது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அறந்தாங்கி களப்பகாட்டை சேர்ந்த ராமச்சந்திரன்(59) என்பவர் மீது வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். பிரகாஷ் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.