கந்தர்வகோட்டை அருகே தூக்கிட்ட நிலையில் இளைஞர் சடலம் தொங்கியது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
கந்தர்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி கிராமத்தில் அருகே உள்ள வாரி பகுதியில் உள்ள தைலமரத்தில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், காசாவளநாடு புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மகன் சண்முகவேல் (31) என்ற இளைஞர் கயிறால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸார், சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.