ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு: திமுகவினர் சாலை மறியல்

மதுராந்தகத்தில் தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

மதுராந்தகத்தில் தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரனூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 எம்எல்ஏக்கள் உள்பட 211 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். 
புதுக்கோட்டையில்... புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமையில் திமுகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
அதில், மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ எஸ்.ரகுபதி உள்ளிட்ட 35 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குடியில்... ஆலங்குடியில் சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று வடகாடு முக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, ஆலங்குடி போலீஸார் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.
கீரனூரில்...  கீரனூரில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேரை கீரனூர் போலீஸார் கைது செய்தனர்.
அறந்தாங்கியில்... நகர திமுக சார்பில்  அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ 
உதயம் சண்முகம் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர்  இரா. ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
 கட்சி நிர்வாகிகள் ஆ. செல்லத்துரை, வின்சென்ட் ராஜேந்திரன், வி.சி.செல்வம், என்.கே.சாகுல்ஹமீது, அ.காசிநாதன், க.ராஜேந்திரன், பாத்திமா, சிக்கந்தர்,  படிக்காசு, வி.கருணாநிதி, முத்துராமன், கோ.சக்திவேல்  உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக அரசிற்கு எதிராகவும்,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷமிட்டனர்.
கந்தர்வகோட்டையில்... பேருந்து நிலையம் அருகே தஞ்சை-புதுகை சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் எம். பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.தமிழய்யா, நகரச் செயலாளர் எம்.ராஜா, முருகேசன், காட்டுநாவல் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை கந்தர்வகோட்டை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com