அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 30 ஆயிரத்தில் அமைக்கப்பட்ட ரோட்டரி பூங்காவை மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என். கண்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மைதானத்தில் பல வண்ண அழகிய செடிகளுடன், பயன்தரும் மரக்கன்றுகளும் அமைத்து பராமரிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மழைநீர் சேர்ந்து பள்ளம் மேடாக காட்சியளித்த பள்ளி வளாகம் ஜே.சி.பி. மூலம் சரிசெய்யப்பட்டது பூங்கா திறப்பு விழாவுக்கு ரோட்டரி கிளப் தலைவர் அ. அபுதாலிப் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அ. ராஜசேகர், ரோட்டரி துணை ஆளுநர் டிஏஎன். பீர்சேக், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஆ. கராத்தே கண்ணையன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.வி.என். கண்ணன் பூங்காவை திறந்து வைத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தொடர்ந்து பராமரிக்கும் பணியை ரோட்டராக் உறுப்பினர்கள் மூலம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ரோட்டரி ஓருங்கிணைப்பாளர் ஆர். சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் வி. கர்ணன், அ. சாத்தையா, வி. விஜயாதுரைராஜ், கே. சுரேஷ்குமார், ஸ்டாலின், உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி செயலர் எஸ். பார்த்திபன் வரவேற்றார். பொருளாளர் எஸ். விஜய் நன்றி கூறினார்.