அறந்தாங்கி அருகே  மினிவேன் கவிழ்ந்து  மீன் வியாபாரி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மினிவேன் கவிழ்ந்து மீன் வியாபாரி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மினிவேன் கவிழ்ந்து மீன் வியாபாரி இறந்தார்.
அறந்தாங்கி மண்டிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வெள்ளைச்சாமி, மீன் வியாபாரி.  இவர் மேலும் இரு வியாபாரிகளுடன்  மீன் வாங்க சனிக்கிழமை  தூத்துக்குடிக்குடிக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.  அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையில் உள்ள முனிக்கோயில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து தலையில் பலத்த  காயமடைந்தார்  வெள்ளைச்சாமி. 
மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.ஆம்புலன்ஸ் மூலம்  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது  ஏற்கெனவே அவர் இறந்தது தெரியவந்தது.   விபத்து குறித்து  ஆவுடையார்கோவில் போலீஸார்  வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com