கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சு . கணேஷ் தலைமையில் வரும் அக். 24-ல் நடைபெறுகிறது.
அதற்கான முன் மனு பெறும் முகாம் கல்லாக்கோட்டையில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜாகீர் உசேன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை வட்டாட்சியர் இ. ஆரமுததேவசேனா முன்னிலை வகித்தார். கல்லாக்கோட்டை வருவாய் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். முகாமில் முன்னாள் ஊராட்சி தலைவர் பவுன்ராஜ், அரசு ஒப்பந்தத்தாரர் ஆனந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விஏஓ அ . வீரபாண்டியன் நன்றி கூறினார். முகாமில் இலவச பட்டா கோருதல், பட்டா மாறுதல் , பெயர் திருத்தம் உள்ளிட்ட 63 மனுக்கள் பெறப்பட்டது.