புதுகை சிறையில் திடீர் சோதனை

புதுக்கோட்டை சிறைச் சாலையில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சிறைச் சாலையில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனர். சிறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களில் 2 முறை நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை. 
இந்நிலையில், முறைகேடு புகார்களுக்கு பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு கண்காணிப்பாளராக ருக்குமணி பிரியதர்ஷினி மாற்றப்பட்டார். 
இந்நிலையில், மாவட்ட சிறைச்சாலையில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  கைதிகளிடம் போதைப்பொருள்கள், செல்லிடப்பேசிகள், ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா சோதனை செய்யப்பட்டது.  இருப்பினும் சோதனையில் ஏதும் சிக்கவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com