கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்: போலீஸார் விசாரணை

அன்னவாசல் அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அன்னவாசல் அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிலரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி மகன் அழகர்சாமி(19). இவர் பெருமநாட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதேகல்லூரியில் 2ஆம் ஆண்டு பயிலும் பூலாங்குறிச்சியைச் சேர்ந்த சிவாக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவருக்கும் கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரது நண்பர்களுக்கு தெரியவரவே, கல்லூரிக்கு வெளியே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்களாம். தகவலறிந்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார், மோதலில் ஈடுபட்ட திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த சத்தியபாலா(17), நீலகண்டன்(19), பன்னீர்செல்வம்(20), குமரேசன்(18), வெற்றிவேல்(17), விஜய்(18), பெருமநாட்டைச் சேர்ந்த அருண்குமார்(19), சிவா ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com