பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பொன்னமராவதி அருகே மைலாப்பூர் ஊராட்சி பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஆர்.பழனியப்பன்(24), பொன்னமராவதியில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்துவிட்டு பிள்ளையார்பட்டிக்கு சென்றபோது நாட்டுக்கல் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் நிலைதடுமாறி இரு சக்கரவாகனம் மின்கம்பத்தில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.