பொன்னமராவதியில் ஹோட்டல் அண்ணாமலை திறப்பு

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் அண்ணாமலை மற்றும் அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் அண்ணாமலை மற்றும் அஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான எம்.சசிக்குமார் ஹோட்டல் அண்ணாமலையை திறந்து வைத்தார். ஹோட்டல் உரிமையாளர்கள் எஸ்.ஜெயராமன், எஸ்.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகம்மாள் ஏ.எல்.சிங்காரம், வாசுகி தேவி சிவக்குமார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கா.மணிமேகலை, வெள்ளையம்மாள் அஞ்சப்பர் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன், புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி எம்எல்ஏக்கள் சிவா, செல்வம், அஞ்சப்பர் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் கந்தசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அஞ்சப்பர் ஏசி ரெஸ்டாரண்டை ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி. ஏ.எம்.எஸ்.குணசீலன், ராகவேந்திரா திருமண மஹாலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். முதல் விற்பனையை வலையபட்டி கே.ஆர்.ரெஸிடென்ஸி உரிமையாளர் கே.ஆர்.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மதுரை யாதவர் கல்லூரி தாளாளர் கே.பி.நவநீதகிருஷ்ணன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். மதுரை அண்ணாமலை இண்டர்நேஷனல் இயக்குனர் ஜெ.நரேந்திரன், ஜெ.அருண்பாண்டியன், ஜி.சச்சின் பரத், ஜெ.வித்ய வர்ஸினி, ஜி.ஸ்ருதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com