பொன்னமராவதியில் விநாயகர் ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை கரைக்கும் வைபவம் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் சிவன் கோயில் திடலில் 13 ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை விழாக்குழு சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சனிக்கிழமை மாலை விநாயகர் சிலைகளது ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.
பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தில் நேதாஜி இளைஞர் மன்றம், இந்திரா நகர், பூக்குடி வீதி, பாலமேடு வீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட 15 விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து அமரகண்டான் குளத்தில் கரைக்கும் வைபவம் நடைபெற உள்ளது.