புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் மக்கள் தொடர்பு முகாம் வருகிற புதன்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குளத்தூர் அருகேயுள்ள மாத்தூரில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் செப்.19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறுவதோடு, தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.