கோபுராஜபுரம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்

பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் ஊராட்சி நூலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் ஊராட்சி நூலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பாபநாசம் வட்டா ட்சியர் க. ராணி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தனி வட்டாட்சியர் மலர்குழலி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வருவாய்த் துறை, வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். பெற்ற மனுக்கள் உடனடியாக பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான தீர்வு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி கலியமூர்த்தி, வருவாய் அதிகாரி பிராங்ளின், கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com