பேராவூரணியில் கண் சிகிச்சை முகாம்

பேராவூரணியில் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணியில் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் கே.பி.எல். ரமேஷ் தலைமை வகித்தார். முகாமில் 312 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டதில் 83 பேர் அறுவைச் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், என்.பி. நீலகண்டன், நாகராஜ், கெளதமன் உள்ளிட்டோர் செய்தனர். செயலர் ஏ. சுப்பிரமணியன் வரவேற்றார்.
பொருளாளர் டி. முருகானந்தம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com