பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் முக்கால் மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தொடர் இடி, மின்னலால் மின் தடை ஏற்பட்டு நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. சுமார் 45 நிமிஷங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது. இதேபோல, அதிராம்பட்டினத்திலும் பரவலாக மழை பெய்தது.