தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் காந்தியின் மனைவி நிர்மலா (30). இவர் ஆக. 16-ம் தேதி இரவு வீட்டில் மின் விசிறியில் கயிற்றை மாட்டி தூக்கிட்டுக் கொண்டார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் சுரேஷ் காந்தி திட்டியதால், நிர்மலா தற்கொலைக்குத் தூண்டப்பட்டு, தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ் காந்தியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.