பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை சாந்தி நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திருப்பள்ளி எழுச்சி, 108, 1,008 சக்தி பாடல் படிக்கப்பட்டு, ஆதிபாரசக்திக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், மன்றத் தலைவர் டி.விவேகானந்தன் தலைமையில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று புறத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் தைபூச இருமுடி சக்தி மாலை அணிந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மன்ற செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் அண்ணாமலை, சித்ரவேல், சுப்ரமணியன், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.