இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.7) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.7) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற் பொறியாளர் (பொறுப்பு) சிவ. செந்தில்நாதன் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் தலைமையில் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வல்லம்,
நீலகிரி, மின் நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், தங்களது குறைகளை நேரில்
தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com