ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வழக்கமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், வட்டாட்சியர் ஜானகிராமன், தனி வட்டாட்சியர் செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் முருகன், துணை ஆணையர் விஜய், பேரூராட்சி செயல் அலுவலர் சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை
உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.