சாராயம் விற்ற 5 பேர் கைது

ஒரத்தநாடு அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். 

ஒரத்தநாடு அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். 
ஒரத்தநாடு அருகே திருவோணம், ஊரணிபுரம், புதுவிடுதி வேப்பங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்பதாக திருவோணம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து உதவி காவல்
ஆய்வாளர்  ஜேசுதாஸ், ஏட்டுகள் தமிழ்செல்வன், செல்வம் ஆகியோர் அப்பகுதிகளில் ரோந்துப் பணிக்கு சென்றனர். 
அப்போது, ஊரணிபுரம் அருகே வெட்டுவாக்கோட்டை செல்லையன் மனைவி தேன்மொழி (62), கொள்ளுக்காடு நம்பிராஜன் மனைவி செல்லம்மாள்(57), வேப்பாங்காடு ராஜா, புதுவிடுதி கார்த்திக்(22),
பட்டுவிடுதியை சேர்ந்த செல்லையன் ஆகியோர் பாட்டில்களில் சாராயம் விற்றது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த சாராய பாட்டில்களை
பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com