பேராவூரணியில் கல்லூரி பேருந்து மோதியதில், எல்ஐசி முகவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பேராவூரணி பேரூராட்சி தெற்கு நாட்டாணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). எல்ஐசி முகவரான இவர், பூக்கொல்லை சென்று விட்டு பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது,
பூக்கொல்லை நான்கு சாலை பகுதியில் வந்தபோது, பேராவூரணியில் உள்ள ஒரு கல்லூரி பேருந்து, ரெட்டவயல் சாலையில் திடீரென திரும்பியது.
அப்போது, அந்த பேருந்து கணேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்
கணேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கணேசன் மனைவி சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.