தஞ்சாவூர் மாவட்ட ரேஷன் கடைகளில் குறைதீர் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
தஞ்சாவூர் வட்டத்தில் திருமலைசமுத்திரம், திருவையாறு வட்டத்தில் கண்டியூர் 2, ஒரத்தநாடு வட்டத்தில் கீழ உளூர், கும்பகோணம் வட்டத்தில் அத்தியூர், பாபநாசம் வட்டத்தில் ரெங்கநாதபுரம்,
திருவிடைமருதூர் வட்டத்தில் வண்ணக்குடி, பட்டுக்கோட்டை வட்டத்தில் கிருஷ்ணாபுரம், பேராவூரணி வட்டத்தில் திருப்பூரணிக்காடு, பூதலூர் வட்டத்தில் செய்யாமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள
ரேஷன் கடைகளில் குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது.
இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பொது விநியோக திட்டத்தில் தங்களுக்கு உள்ள குறைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.