தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் விவரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில்
வேளாண்மைத் துறை அலுவலர்களிடையே ஆட்சியர் அண்ணாதுரை பேசியது:
நிகழாண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரீமியம் பெறப்பட்ட விவசாயிகளின் விவரத்தை உரிய படிவத்தில் ஒப்படைக்க வேண்டும். கடன் பெறாத விவசாயிகள் செலுத்திய பிரீமிய
விவரத்தை டிசம்பர் 7-ஆம் தேதிக்குள்ளும், கடன் பெற்ற விவசாயிகள் செலுத்திய பிரீமியம் விவரத்தை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள்ளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) க. நெடுஞ்செழியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜஸ்டின், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், கூட்டுறவு
சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.