நெய்குப்பை சுந்தரேசுவரர் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் அருகேயுள்ள நெய்குப்பை சுந்தரேசுவரர் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகேயுள்ள நெய்குப்பை சுந்தரேசுவரர் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பந்தநல்லூர் அருகே நெய்குப்பை சுந்தரேசுவரர் கோயிலில் 17 பஞ்சலோக சிலைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் தலைவர் பொன்மாணிக்கவேலிடம் கோயில் அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, பஞ்சலோக சிலைகளைப் பாதுகாக்கும் விதமாகப் பகலில் இருவரும், இரவில் இருவரும் என மொத்தம் 4 போலீஸார் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இக்கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com