அய்யம்பேட்டை பேருந்து நிறுத்த வளாகத்தில் பாபநாசம் தாலுகாவில் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, டிசம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா முழுவதும் 2016 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. பேராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மு.கனகராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட குழு உறுப்பினர் சாமு.தர்மராஜ் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் சாலை மறியல் பேராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஏற்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் பி. குணசேகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.