மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதி தந்தை, மகன் சாவு

ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில்  தந்தை -மகன் இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். 

ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில்  தந்தை -மகன் இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். 
ஒரத்தநாடு சைவமடத்தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(42). இவர் வியாழக்கிழமை தனது மனைவி சித்ரா (36), மகன் நித்திஷ்குமார் (5), மகள் நிவாஸினி ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் ஒரத்தநாடு குருமன் தெரு அருகே சென்ற போது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மணிவண்ணன் மற்றும் அவரது மகன் நித்திஷ் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலயே இறந்தனர். 
பலத்த காயமடைந்த சித்ரா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
சிறுமி நிவாஸினி தெலுக்கன்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com