பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. 

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. 
இக்கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவிகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, நிகழாண்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில், கவிஞர் பட்டுக்கோட்டை ராஜப்பா புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் விக்டோரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோயம்புத்தூர் எம்.எஸ்.எம். 
புத்தக நிலையம் போன்ற பல்வேறு பதிப்பகத்தார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com