பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கட்டட கட்டுமானப் பணிகளை மண்டல செயற்பொறியாளர் முருகேசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட புதிய கட்டட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை திருச்சி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட உதவி செயற்பொறியாளர் மாதவன், இளநிலை பொறியாளர் பிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் நா.மனோகரன், பணி மேற்பார்வையாளர் தாமஸ் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.