வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச. 15 வரை தேதி நீட்டிப்பு: ஆட்சியர் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச. 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச. 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் மீது சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நவம்பர் 30-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு 1999-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்களை பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6 ஏ அளித்து தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌i‌n  என்ற இணையதளம் வழியாகவும் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com