தாராசுரத்தில் ஒட்டக்கூத்தர் ஜீவசமாதிக்கு குடமுழுக்கு

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் பத்ரகாளியம்மன் சமேத வீரபத்திரசுவாமி கோயிலில் உள்ள கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் ஜீவசமாதிக்கு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் பத்ரகாளியம்மன் சமேத வீரபத்திரசுவாமி கோயிலில் உள்ள கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் ஜீவசமாதிக்கு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்குட்பட்ட இக்கோயிலில் உள்ள ஒட்டக்கூத்தரின் ஜீவசமாதிக்கு பல நூறு ஆண்டுகளுக்குப்பிறகு ஞாயிற்றுக்கிழமை  காலை   மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 15-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,பூர்வாங்க பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை லெட்சுமி பூஜை, சோம கும்ப பூஜை, காலை மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்று, காலை 8 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கும்  பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை கும்பகோணம் வீரசைவ பெரிய மடம் மற்றும் தாராசுரம் வீரபத்திர சுவாமி கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com