பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த ஜூலை 16-ம் தேதியை பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஆலடிக்குமுளையில் சிதிலமடைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலை சீரமைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழுதடைந்துள்ள தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பி.குணசுந்தர் தலைமை வகித்தார். செயலர் ஆர்.முகிலன் வரவேற்றார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் சதா.சிவக்குமார், மாவட்ட இளைஞரணிச் செயலர் ரா.மாரிமுத்து, தொண்டரணிச் செயலர் செந்தில் உள்ளிட்டோர் பேசினர். அம்பேத்கர் இளைஞர் மன்றப் பொருளாளர் மு. பிரதீப் நன்றி கூறினார்.