ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, இரவில் வெள்ளிச் படிச் சட்டத்தில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, இரவில் வெள்ளிச் படிச் சட்டத்தில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
இந்த விழாவில் ஜூலை 22ஆம் தேதி வரை காலை பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. ஆடி அமாவாசை நாளான ஜூலை 23-ம் தேதி காவிரி ஆற்றில் அறம் வளர்த்த நாயகி, பஞ்சமூர்த்திகளுடன் ஐயாறப்பர் எழுந்தருள உள்ளார்.
மேலும், தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.  இதையடுத்து இரவில் பிரதான வைபவமான அப்பர் சுவாமிக்கு கயிலைக் காட்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஜூலை 24ஆம் தேதி காலை பல்லக்கு,  இரவு குதிரை வாகனமும்,  25ஆம் தேதி ஆடிப்பூர தேரோட்டமும், 26ஆம் தேதி இரவு பிராய சித்தாபிஷேகத்துடனும் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com