திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை காவிரி ஆற்றில் மழை வேண்டி திருவையாறு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டு வழிபாடு நடத்தினர்.
தஞ்சாவூர் வழிபாட்டு மன்ற இளைஞர் அணிச் செயலர் குணாளன் தலைமை வகித்தார். இதில் கோ பூஜை, 108 மந்திரங்கள் கூறியும், மழை வேண்டி குரு போற்றி பாடல், அம்பாள் போற்றி மந்திரம் பாடினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றின் நடுவில் நின்று மழை பாடல் பாடி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நிமிடம் தியானம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், மன்றத்தின் தஞ்சாவூர் வட்டாரத் தலைவர் நாகராஜன், சண்முகம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.