பட்டுக்கோட்டையில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டுக்கோட்டையில் மாவட்ட ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டுக்கோட்டையில் மாவட்ட ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி சாலை முக்கம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். அந்த அமைப்பின் நிர்வாகிகள் கோ.வாசுதேவன், ஆர்.சேகர், மு.ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டத் தலைவர் வெ.தேவய்யா, மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் சி.பக்கிரிசாமி, ஏஐடியுசி பட்டுக்கோட்டை நகரப் பொறுப்பாளர் ரோஜா ராஜசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கட்டடப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசுவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com